• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காய்கறி மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்கவும் தயாராக இருக்கிறோம் – வியாபாரிகள்

May 18, 2021 தண்டோரா குழு

கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்துவதில் அரசின் விதிமுறைப்படி,வேண்டுமானால் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு விடுமுறை அளிக்கவும் தயாராக இருப்பதாக கோவை டி.கே.மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவமாடி வரும் நிலையில்,24 ம்தேதி வரை முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் மளிகை,காய்கறி மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கென காலை ஆறு மணி முதல் பத்து மணி வரை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதிலும் பொதுமக்கள் கூட்டமாக சமூக விலகலை பின்பற்றாமல் இருப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள டி.கே.மார்க்கெட் மொத்த காய்கறி விற்பனை நடைபெறும் இடத்தை கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையர் சிவசுப்ரமணியம் ஆய்வு செய்து,வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு முக கவசங்கள் அணிவது மற்றும் சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து கோவை டி.கே.மார்க்கெட் காய்கனி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் முக கவசங்கள் இல்லாமல் உள்ளே அனுமதிப்பதில்லை எனவும்,குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களை மார்க்கெட்டிற்கு அழைத்து வர தடை விதித்துள்ளதாக கூறினார்.தொடர்ந்து அவர்,கொரோனா பரவலை கட்டுபடுத்துவதில் அரசு கேட்டு கொண்டால் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு விடுமுறை அளிக்கவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க