• Download mobile app
09 Mar 2026, MondayEdition - 3680
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கானக கோவை திட்டத்தின் கீழ் 200 மரக்கன்றுகளை நட்ட மாமன்ற உறுப்பினர்

August 15, 2022 தண்டோரா குழு

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநகராட்சி 15 வார்டு பகுதியில் கானக கோவை திட்டத்தின் கீழ் 200 மரக்கன்றுகளை மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து உள்ளிட்டோர் நட்டனர். முன்னதாக வார்டிற்கு உட்பட்ட பல பகுதிகளில் தேசியக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினர்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி 15 வது வார்டு, காந்தி நகர் மேல்நிலைத் தொட்டி அருகில் கானக கோவை திட்டத்தின் கீழ் பசுமை பூங்கா அமைக்கப்பட்டது. இதில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சை முத்து மற்றும் அதிகாரிகள் செந்தில் பாஸ்கர், குமரேசன், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநில பொதுச்செயலாளர் எஸ் பச்சைமுத்து கோவை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக் அப்துல் காதர் லயன் மோகன்ராஜ் சின்னு ராமகிருஷ்ணன் செந்தில்குமார் மருதகிரி சதீஷ் கோபால் ரங்கசாமி பழனிசாமி ரகுபதி மற்றும் பொதுமக்கள் 200 மரக்கன்றுகளை நட்டனர்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகம் மற்றும் வார்டிற்கு உட்பட்ட பல இடங்களில் தேசியக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து தூய்மைக் காவலர்கள் கவுரவிக்கப்பட்டு அவர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை சேகரிக்க பிளாஸ்டிக் டிரம்களை மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து வழங்கினார்.

மேலும் படிக்க