• Download mobile app
23 Jan 2026, FridayEdition - 3635
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்படும் – ரவிசங்கர் பிரசாத்

December 30, 2016 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வரும் காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புது தில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரவிசங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

பிரதமர் நரேந்திர மோடி மீதும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மீதும், அடிப்படை ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை, காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். இது போன்ற பொய்ப் புகார்களைக் கூறினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொய்ப் புகார் கூறியவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.

பழைய ரூபாய் 500, 1000 வாபஸ் நடவடிக்கைக்குப் பின் நடைபெற்ற உள்ளாட்சிகள் மற்றும் இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சி, அதிலிருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

மேலும் படிக்க