November 18, 2019
தண்டோரா குழு
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்காவிட்டால், காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்படும் என பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
ரபேல் விமானம் வாங்கியதில் பிரதமர் மீது பொய் குற்றச்சாட்டு சொன்ன ராகுல் பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பா.ஜ.க. சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
உச்சநீதிமன்றம் கூறாத ஒன்றை, தேர்தல் நேரத்தில் தவறாக கூறிய ராகுல் காந்தி அப்போதே அருண் ஜெட்லி பதில் கூறிவிட்டார். உச்சநீதிமன்றமும் ராகுல் காந்தியின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்காமல் தொடர்ந்து இது போல் பேசி வந்தால் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மனு தாக்கல் செய்யப்படும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.