• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்எல்ஏ பி.சி பாட்டீலிடம் முதலமைச்சர் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ வெளியீடு

May 19, 2018 தண்டோரா குழு

காங்கிரஸ் எம்.எல்.ஏ பாட்டீலுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ வெளியானது.

கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்குஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தும் பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் அழைப்பு விடுத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி,எடியூரப்பா தனது மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கபட்டது.இது குதிரை பேரம் நடத்த வாய்ப்பிருப்பதாக கருத்து நிலவியது.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது,இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் கர்நாடக பாரதீய ஜனதா தலைவர்கள் பேசியதற்கான ஆதாரம் உள்ளதாக கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

மேலும்,காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களிடம் ஜனார்த்தனரெட்டி,எடியூரப்பா,ஸ்ரீராமுலு ஆகியோர் பேசியதற்கான ஆடியோ ஆதாரம் உள்ளது.அவர்கள் என்ன சலுகைகள் வழங்குவதாக கூறினார்கள்,எப்படி குதிரைபேரத்தில் ஈடுபட்டார்கள் என்பதெல்லாம் அந்த ஆடியோவில் உள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாட்டீலுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேரம் பேசியதாக ஆடியோ இன்று வெளியானது.இது பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க