• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கள்ளச் சாராயத்துக்கு 6 பேர் பலி

January 3, 2017 தண்டோரா குழு

மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கல்சி என்னும் கிராமத்தில், கள்ளச் சாராயம் குடித்து 6 பேர் உயிரிழந்தனர். 3௦ பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (ஜனவரி 2) கூறியதாவது:

மேற்கு வங்க மாநிலத்தில் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ராம்கோபால்பூர் என்னும் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் பர்த்வான் மருத்துவமனை மற்றும் புர்ஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்களில் 6 பேர் உயிரிழந்தனர். 3௦ பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர். அவர்களில் 18 பேருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். விரைவில் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க