• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கள்ளச் சாராயத்துக்கு 6 பேர் பலி

January 3, 2017 தண்டோரா குழு

மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கல்சி என்னும் கிராமத்தில், கள்ளச் சாராயம் குடித்து 6 பேர் உயிரிழந்தனர். 3௦ பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (ஜனவரி 2) கூறியதாவது:

மேற்கு வங்க மாநிலத்தில் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ராம்கோபால்பூர் என்னும் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் பர்த்வான் மருத்துவமனை மற்றும் புர்ஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்களில் 6 பேர் உயிரிழந்தனர். 3௦ பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர். அவர்களில் 18 பேருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். விரைவில் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க