• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கள்ளக்காதலனின் மனைவி – மகள் குறித்து பேஸ்புக்கில் அவதூறு அழகு கலை பெண் நிபுணர் சிறையில் அடைப்பு

April 20, 2022 தண்டோரா குழு

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் உமா ரஞ்சனி (28). அழகு கலை நிபுணர்.இவருக்கும் கோவையை சேர்ந்த 40 வயது தனியார் நிறுவன ஊழியருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கள்ளக்காதலர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உற்சாகமாக வலம் வந்தனர்.இந்த தகவல் தனியார் நிறுவன ஊழியரின் மனைவிக்கு தெரியவந்தது.இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
பின்னர் இதுகுறித்து அவரது மனைவி குடும்பத்தினரிடம் கூறினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த இருதரப்பு குடும்பத்தினரும் கள்ளக்காதலில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியரை அழைத்து கண்டித்து அறிவுரை கூறினர்.இதனால் தனியார் நிறுவன ஊழியர் கள்ளக்காதலை கைவிட்டார்.

இதையடுத்து அவர் கள்ளக்காதலியான உமாரஞ்சினியை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார்.ஆனால் உமா ரஞ்சனி கள்ளக்காதலை கைவிட மறுத்து தொடர்ந்து அவரிடம் பேச முயறசி செய்து வந்ததாக தெரிகிறது. அப்போது தனியார் நிறுவன ஊழியர் அவரை கண்டு கொள்ளவில்லை.இதை பொறுத்துக்கொள்ள முடியாத உமாரஞ்சனி,கள்ளகாதலனை பழி வாங்குவதற்காக அவரது மனைவி, 15 வயது மகளின் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் ஆபாச வார்த்தைகளால் குறிப்பிட்டு பதிவிட்டார்.

இதனை கண்டு தனியார் நிறுவன ஊழியரின் மனைவி அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் இதுகுறித்து அவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உமா ரஞ்சனியை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க