• Download mobile app
27 May 2025, TuesdayEdition - 3394
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் துவக்கம்

February 10, 2020

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் கோவை சரவணம்பட்டி பிபிஜி கல்வியியல் கல்லூரி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் கலை இலக்கிய போட்டிகளின் துவக்க விழா கோவை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

இன்று மற்றும் நாளை என இரு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தில் இருந்து 18 கல்வியியல் கல்லூரிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டன.இதில், 100மீ, 400மீ, தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய தடகளப் போட்டிகளும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் இசைப் போட்டி ஆகிய கலை இலக்கிய போட்டிகளும் நடைபெறுகின்றன.

இந்நிகழ்வின் துவக்க விழாவில் கோவை மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.பிபிஜி கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். பிபிஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சாந்தி தங்கவேலு அவர்கள் முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக பாண்டியன் கலந்து கொண்டார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை

பிபிஜி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் சித்ரா, உடற்கல்வி இயக்குனர் திரு. மனோகரன் மற்றும் இதர பேராசிரியர்கள் செய்திருந்தனர். நிகழ்வின் இரண்டாவது நாளன்று பிபிஜி கல்வியியல் கல்லூரி கலையரங்கில் கலை இலக்கிய போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க