• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கலைக்குடும்பத்தின் சமூகமதிப்பு உயர்ந்திருக்கிறது சூர்யா, கார்த்திக்கு வைரமுத்து வாழ்த்து

July 25, 2018 தண்டோரா குழு

தீரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி பாண்டிராஜ் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சத்யராஜ்,சூரி,சாயிஷா, பிரியா பவானி ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.விவசாயத்தின் பெருமை மற்றும் கூட்டுகுடும்ப வாழ்க்கையை பற்றி பேசும் படம் என்பதால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில்,இப்படத்தின் வெற்றி விழா இன்று நடைபெற்றது.இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.அப்போது,நடிகர் சூர்யா விவசாய மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார்.இந்நிலையில் நடிகர் சூர்யா,கார்த்திக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“அண்ணன் சிவகுமார் பெற்றெடுத்த
சிங்க மைந்தர்கள்
வேளாண்குடி மக்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கியதை வரவேற்கிறேன்; வாழ்த்துகிறேன். அன்பு சூர்யா! கார்த்தி! உங்களால் கலைக்குடும்பத்தின்
சமூகமதிப்பு உயர்ந்திருக்கிறது.
கலைத்தொண்டு தொடரட்டும்;
காலம் கைதட்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க