• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கலாபவன் மணி மரணம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

April 12, 2017 தண்டோரா குழு

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் மர்மமான மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி மர்மமான முறையில் கொச்சியில் உள்ள தனியார் விடுதியில் உயிரிழந்தார். உடல்நலக்குறைவால் கலாபவன் மணி இறந்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகம் எழுந்ததால் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கலாபவன் மணி மது அருந்தியதாகவும், அவரது உடலில் மெத்தில் ஆல்கஹால் அதிகளவில் இருந்ததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கலாபவன் மணியின் சகோதரர் இது தொடர்பாக புகார் அளித்தார்.அதனடிப்படையில், கலாபவன் மணி மது அருந்தும்போது, அவருடன் இருந்த வேலையாட்கள் விபின், முருகன், அருண் மற்றும் நடிகர்கள் ஜாபர், ஷாபு ஆகியோர் உடன் இருந்ததால் அவர்களிடமும் சாலக்குடி போலீசார் விசாரணை நடத்தினர். எனினும் ஓராண்டாகியும் கலாபவன் மணியின் மரணம் குறித்த விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், இவ்வழக்கினை சிபிஐக்கு மாற்றி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த விசாரணையை ஒரு மாதத்திற்குள் சிபிஐ துவங்க வேண்டும் எனவும், விசாரணை அதிகாரிகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னதாக கலாபவன் மணியின் மனைவி, சகோதரர் உட்பட அவரது உறவினர்கள் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க