• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கற்பகம் கல்லூரியில் ‘போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் ’

September 2, 2022 தண்டோரா குழு

கோவை கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில்‘போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கமானது நடைபெற்றது.

அக்கருத்தரங்கத்தில், மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப.தமிழரசி வரவேற்புரை வழங்கினார். துணைவேந்தர் முனைவர் ப.வேங்கடாசலபதி தலைமையேற்றார். கோவை மாவட்ட காவல், மது விலக்குப்பிரிவின் காவல் துணைக்கண்காணிப்பாளர் செல்வராஜ் மாணவர்களுக்கு போதைப் பொருள்களின் தீமைகளை எடுத்துரைத்தார்.

மேலும், சாதிக்க வேண்டிய இளைஞர்கள், போதைப்பொருள் பயன்பாட்டினால் வாழ்க்கையைத் தொலைக்கிற அவலத்தை விளக்கினார். பெற்றோரின் அன்பையும், ஆசிரியர்களின் அறிவுரையையும் மறந்து சில இளைஞர்கள் போதைப்பொருள்களுக்கு அடிமையாகின்றனர். அதனால் அவர்கள் சுயநினைவை இழந்து, மனநல பாதிப்பு முதலான சிக்கல்களுக்கு ஆளாகின்றனர்.

அறியாமையால் இளைஞர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் தொலைகிறது; மாணவர்கள், இளைஞர்கள் என்ற பேதமின்றி போதைப்பொருள் பயன்படுத்துவோர் எவராயினும், சட்டம் அவர்களைத் தண்டிக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு என்ற வகையில் இளைஞர்களின் மீது பதியப்படுகிற வழக்குகள், அவர்களது ஆயுள்வரையில் தொடர்கிற அவலத்தை உணரவேண்டும்; அதனால் போதைக்கு அடிமையாகி மாணவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்வதிலிருந்து விழிப்புணர்வு தேவை என்றார்.

கருத்தரங்கத்தின் நிறைவாக கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் புல முதன்மையர் முனைவர் நா.வெ.பாலாஜி நன்றி கூறினார். கருத்தரங்க ஏற்பாடுகளை மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப. தமிழரசி ஒருங்கிணைத்தார்.

மேலும் படிக்க