• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கறிவேப்பிலை வெங்காயத்துடன் செல்பி எடுத்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

February 22, 2021 தண்டோரா குழு

கறிவேப்பிலை மற்றும் வெங்காய விலை உயர்வை கண்டித்து பல்வேறு தரப்பினரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் மீம்ஸிகள் பகிரப்பட்டு வருகிறது.

கறிவேப்பிலை தற்போது ஒரு அதிசயமான அத்தியாவசிய பொருளாக பார்க்கப்படுகிறது என்றும் பலரும் தெரிவித்து வரும் நிலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்துடன் செல்பி எடுத்து நூதன ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

காந்திபுரம் நஞ்சப்பா சாலை பார்க் வீதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை மாலையாக அணிவித்து அதன் விலையுயர்வை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். மேலும் கறிவேப்பிலை கடைகளில் மற்றும் சாலையோர காய்கறிகளில் மிகவும் விலை குறைவில் கிடைத்து கொண்டிருந்த நிலையில் தற்போது அது மிகவும் விலை உயர்ந்துள்ளது என்று தெரிவித்த அவர்கள் விலையுயர்ந்த அத்தியாவசிய பொருளாக மாறிய கறிவெப்பிலை மற்றும் வெங்காயத்துடன் செல்பி எடுத்து கொண்டனர்.

இதனை சமூக வலைதளங்களில் ஹேஸ்டேக் செய்ய போவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க