• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடக மாநிலத்திற்கென தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார் – முதலமைச்சர் சித்தராமையா

March 8, 2018 தண்டோரா குழு

கர்நாடக மாநிலத்திற்கென தனிக்கொடியை முதலமைச்சர் சித்தராமையா இன்று அறிமுகப்படுத்தினார்.

கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. நீண்ட நாட்களாக தங்களுக்கென்று தனி கொடி வேண்டும் என்று கர்நாடக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. தேசியக் கொடி இருந்தாலும் எங்களுக்கென்று தனிக் கொடி வேண்டும் என்று கோரி வந்தது.இந்நிலையில் கர்நாடக மாநிலத்துக்கென்று தனிகொடியை முதல்வர் சித்தராமையா இன்று அறிமுகம் செய்தார்.இந்த கொடி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

ஏற்கனவே கர்நாடக கொடியை உருவாக்க ஒரு குழுவை முதல்வர் சித்தராமையா உருவாக்கியிருந்தார். இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கொடி இந்திய கொடியை போலவே மூவர்ணங்களை கொண்டதாக உள்ளது.   மேலே மஞ்சள் நிறமும், நடுவே வெள்ளை நிறமும், கீழே சிவப்பு வண்மும் கொண்டதாக உள்ளது .அதைபோல் இந்த கொடியின் நடு பகுதியில் கர்நாடக மாநில அரசின் சின்னம் இடம்பெற்றுள்ளது.

தேர்தல் நெருங்கும் நெரத்தில்  முதல்வர் சித்தராமையா இந்த கொடியை அறிமுகப்படுத்தியுள்ளது பாஜகவுக்கு செக் வைக்க சித்தராமையா முயலுகிறார் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க