• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடக தேர்தல் லாபத்திற்காக தமிழகத்தை போராட்ட களமாக்க வேண்டாம் – மு.க.ஸ்டாலின்

February 27, 2018 தண்டோரா குழு

கர்நாடக தேர்தல் லாபத்திற்காக தமிழகத்தை போராட்ட களமாக்க வேண்டாம்  என திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மு.க ஸ்டாலின்,

தமிழகம் வந்த பிரதமர் மோடி,காவிரி பிரச்சனை பற்றிப் பேசாமல் அமைதி காத்ததும்,உச்சநீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில்,காவிரி மேலாண்மை வாரியத்தை உரிய காலக்கெடுவிற்குள் அமைப்பது குறித்து உத்தரவாதம் தர இயலாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

மேலும்,ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை நிச்சயம் அமைக்க வேண்டும் என்றும் கர்நாடக தேர்தல் லாபத்திற்காக தமிழகத்தை போராட்ட களமாக்க வேண்டாம்  என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க