• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்ந்தது

May 10, 2018 தண்டோரா குழு

கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 12-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

மொத்தமுள்ள 224 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 223 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. பெங்களூரு ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் இறந்துவிட்டதால், அந்தத் தொகுதியில் மட்டும்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரஸூம், எதிர்கட்சியான பாஜகவும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதைபோல் அங்கு மூன்றாவது பெரிய கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளமும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ல் வாக்குப்பதிவும், மே 15ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க