• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகாவில் அரசுக்கு பள்ளிகளுக்கு 25 கம்ப்யூட்டர்களை வாங்கி கொடுக்க தனியார் பள்ளிக்கு உத்தரவு !

May 29, 2018 தண்டோரா குழு

பெங்களூருவில் அரசு பள்ளிகளுக்கு 25 கம்ப்யூட்டர்களை வழங்குமாறு தனியார் பள்ளி ஒன்றுக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணயைம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் “தஃபோபில்ஸ்” எனும் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர் பள்ளியை குறித்து மாநில குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்துக்கு புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் படிக்காத மாணவர்களை உச்சி வெயிலில் நிற்க வைப்பதகவும் குறிப்பிட்ட சில பிராண்ட் ஷூக்களை மட்டுமே போட்டு வர கட்டாயப்படுதுவதாகவும் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாகவும் என 13 விதமான புகார்களை பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக அளித்தனர்.

இந்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இது குறித்து விசாரணை நடத்தி தனியார் பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. அதன்படி குற்றம்சாட்டப்பட்ட தனியார் பள்ளிக்கு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அபராதமாக பெங்களுருவில் உள்ள ஐந்து அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பள்ளிக்கும் 5 கம்ப்யூட்டர்களை வாங்கி கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் படிக்க