• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடகத்தில் ரூ.36 லட்சம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கின

December 9, 2016 தண்டோரா குழு

கர்நாடக மாநிலத்தில் கணக்கில் வராத பழைய ரூபாய் நோட்டுகளைப் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 36 லட்சம் ரூபாய் புதிய 2௦௦௦ ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

கல்புர்கியில் சூரஜ் சிங் (3௦) என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தைப் பரிமாற்றம் செய்ய 25 லட்சம் ரூபாயைக் கொண்டு சென்றதாகத் தகவல் கிடைத்தது. அதையறிந்த போலீசார் அவரை அந்த இடத்திலேயே வியாழக்கிழமை (டிசம்பர் 8) கைது செய்தனர்.

மேலும் பழைய ரூபாய் நோடுக்களை கமிஷன் அடிப்படையில் பெற்றுக் கொண்டு அதைப் புதிய நோட்டுகளாக மாற்றி தரும் மோசடி நடப்பதாக சித்ராதுர்கா காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. உடனே தருண் தனியார் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனை நடத்தியதில் 11 லட்சம் மதிப்புள்ள புதிய 2௦௦௦ ரூபாய் நோட்டுக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக தருண் மற்றும் ராஜு என்பவர் கைது செய்யப்பட்டார்.

கல்புர்கியில் 25 லட்சம் ரூபாய் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாகவும், சித்ராதுர்கா பகுதியில் 11 லட்சம் ரூபாய் என மொத்தம் 36 லட்சம் ரூபாய் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளாகவும் சோதனையின் போது சிக்கின. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பயணம் செய்த வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளோம்.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுயுள்ளது. பணம் எங்கிருந்து வந்தது அதே நேரத்தில் பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக பரிமாற்றம் செய்ய ஆர்வம் காட்டியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் 15% கமிஷனுக்காகப் பணப் பரிமாற்றம் செய்துள்ளனர் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க