• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருமத்தம்பட்டி, சூலூரில் வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு

February 10, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி நகராட்சி, சூலூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட கலெக்டர் சமீரன் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி கருமத்தம்பட்டி நகராட்சி வாக்கு எண்ணும் மையமான எஸ்டி ஜோசப் பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், சூலூர், கண்ணம்பாளையம், இருகூர், பள்ளபாளையம் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான சூலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை, வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் முகவர்கள் உரிய வழியில் சென்று வர ஏதுவாக தடுப்புகள் அமைப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர், கழிப்பிடம், மின்வசதி ஆகிய வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.

இவ்வாய்வில் கருமத்தம்பட்டி நகராட்சி கமிஷனர் முத்துசாமி, வருவாய் கோட்டாட்சியர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க