• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணை உள்ள இடத்தில் கடவுள் வாழ்கிறார் என்ற வார்த்தைக்கு இவர்கள் ஒரு அடையாளம் !

June 8, 2021 தண்டோரா குழு

அன்பின் கருவி இதயம்
என்றால் சாவை வென்றுவிடும்
என்ற பாடல் வரிக்கு தகுந்தார் போல்
கோவையில் பசியால் வாடும் உயிர்களுக்கு உணவளித்து மன பலத்தையும் உயிர் வளத்தையும் காக்கின்றனர் மஸ்ஜிதுல் முபஷ்சிர் பள்ளிவாசல் அமைப்பினர்.

இது குறித்து மஸ்ஜிதுல் முபஷ்சிர் பள்ளி அமைப்பினர் S.M.முஜிபுர் ரஹ்மான் கூறுகையில்,

நாங்கள் கடந்த கொரோனா காலத்தில் இல்லாதோருக்கு உதவும் வகையில் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை மக்களிடம் உதவிக்கரம் நீட்டி உதவி செய்து எங்கள் சேவையை தொடர்ந்து செய்து வந்தோம். தற்போது கொரானாவின் இரண்டாம் அலையில் மக்களின் அன்றாட வாழ்க்கையானது நோயினாலும் வறுமையினாலும் வாடிய நிலையில் உள்ளது.

தற்போது கொரோனா மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வருவாய் இழந்த குடும்பத்தினருக்கும்., சாலையோரம் வசிப்பவர்களுக்கு, போத்தனுார் மஸ்ஜிதுல் முபஷ்சிர் திருமறை நகர் பள்ளிகிளை சார்பில், தினமும் 500 பேருக்கு கோவை சுந்தராபுரம்,மதுக்கரை., குனியமுத்தூர், போத்தனூர்.,பி.கே புதூர், கோவைபுதூர், போன்ற பகுதிகளின் சாலையோர மக்களுக்கு சுமார் 12 கிலோமீட்டர் தூரம் வரை உணவு,தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்படுகிறது.

இது மட்டுமின்றி,தினமும் 300 பேருக்கு மளிகை பொருட்கள் தினசரி ஆட்டோவில் கொண்டு சென்று, வினியோகம் செய்து வருகின்றோம். மேலும் கொரோனாவில் பாதிக்கப்பட்டு தனிமையில் உள்ள மக்கள் எங்களுக்கு அலைபேசியில் அழைத்து உணவு மற்றும் மருந்து தேவைப்படும் நிலையில் அதற்கு உண்டான ஏற்பாடு வசதிகளையும் செய்து வருகின்றோம்.

மேலும் முன்கள பணியாளர்களான மாநகராட்சி ஊழியர்களுக்கும் உணவு மற்றும் மளிகை பொருள்களுக்கான பொருட்களையும் அளித்து வருகின்றோம்.’பசியறிவோம், உதவிடுவோம்’ திட்டத்தின் கீழ் இந்த உதவிகள் வழங்கப்படுவதாக, நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.எப்படி சாத்தியமாகிறது என்றால் தங்களின் இந்த சேவைக்கு தங்களை அடையளா படுத்தி கெள்ளாமல் மனிதர்கள் தேடிவந்து பணம் பொருள் தந்து உதவு கிண்றனர் இன்னும் உதவிகள் கிடைத்தால் எண்ணிக்கை கூட்டி உதவிடுவோம் என சொல்லும் நிர்வாகிகள். பசி பட்டினி சாவு வரக்கூடாது சார் நோயில் இறப்பு என்பதே நமக்கு பெரும் இழப்பு இதில் பசியும் சேரக்கூடாது என்பதால் இரவு பகல் என பாராமல் நாங்கள் இந்த சேவையினை தொடர்கிறோம் என்றனர்.

மேலும் படிக்க