• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கருணாநிதி கட்டி கொடுத்த வீடுகளை காலி செய்ய சொல்லி மிரட்டும் நபர் மீது பொதுமக்கள் புகார்

September 27, 2021 தண்டோரா குழு

கடந்த தி.மு.க.ஆட்சியில் கலைஞர் கருணாநிதி கட்டி கொடுத்த வீடுகளை காலி செய்ய சொல்லி மிரட்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குறிச்சி,சில்வர் ஜூப்ளியில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியிரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு முகாமில், சுந்தராபுரம்,குறிச்சி சில்வர் ஜூப்ளி வீதி பகுதியில் வசிக்கும் அருந்ததியர் சமுதாயம் மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அம்மனுவில்,சுந்தராபுரம்,குறிச்சி பகுதியில் சில்வர் ஜூப்ளி வீதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு மறைந்த கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது கட்டி கொடுத்த அரசு தொகுப்பு ஒதுக்கீட்டில் கட்டிய வீடுகளை தற்போது தனி நபர் ஒருவர்,இந்த பகுதியில் குடியிருக்கும் நிலங்கள் எங்களுடையது எனவும், விரைவாக வீடுகளை இடிக்க வேண்டும் இல்லையென்றால் நாங்கள் பொக்லின் வண்டியை விட்டு வீட்டை இடித்து யாரும் புழங்காத அளவுக்கு மதில் சுவர் கட்டி விடுவோம் என்று கூறி தொடர்ச்சியாக மிரட்டுவதாகவும்,

மேலும், அரசு நில அளவை அதிகாரிகள் கிராம அதிகாரிகள், காவல் துறை சார்ந்த அதிகாரிகள். எந்த தகவலும் இல்லாமல் அடிக்கடி வந்து குடியிருக்கும் பகுதிக்கு வந்து இடையூறு செய்வதாகவும், மேலும்,நாங்கள் வசிக்கும் இடத்திற்கு உரிமை கோருபவர் மீது தக்க நடவடிக்கை எடுத்து, வசித்து எங்கள் 16 சமுதாய குடும்பங்களுக்கு இருக்கும் இடத்திற்கு எந்த பாதிப்பில்லாமல் நாங்கள் வாழ்வதற்கு அதே இடத்தில் உதவி செய்து கொடுத்தும் எங்களுக்கு எந்த இன்னல்களும் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பு கொடுக்க கோரியும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

மனு வழங்க ஆட்சியர் அலுவலகம் வந்த, பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆதரவாக குறிச்சி அனைத்து சமூக த்தினர் சார்பாக வடிவேல் சேர்வை சௌந்தர்ராஜ் .நா.சதிசுமள்ளர், ரமணி சேகர்,அரவான்செந்தில் என பல்வேறு சமூகத்தினர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க