• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு நடைபெறும் – திமுக தலைமை அறிவிப்பு

August 8, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணிக்கு தொடங்கும் என தலைமைகழகம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கபட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதையடுத்து கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம்
செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை 4 மணியளவில் தொடங்கும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இதில் தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ளவேண்டும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க