• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கரடியுன் செல்ஃபி எடுக்க முயன்று உயிரிழந்த இளைஞர்!

May 4, 2018 தண்டோரா குழு

கரடியுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தவர் கரடி தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் பிரபு பத்தாரா என்ற வேன் ஓட்டுனர் திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினரை காட்டுப்பகுதி வழியாக வேனில் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.அப்போது,வழியில் காயம் அடைந்த நிலையில்,கரடி ஒன்று படுத்திருந்தது.கரடியை பார்த்த பிரபு அதனுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு அருகே நின்று செல்ஃபி எடுத்தார்.

சற்றும் எதிர்பாராத விதமாக பிரபு கால் தவறி கரடி மீது விழுந்துள்ளார்.அப்போது,அந்த கரடி அவரை கடுமையாக தாக்கியது.எனினும்,அவர் கரடியிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தார்.ஆனால் அந்த கரடி அவரை பலமாக தாக்கி கிழே தள்ளியது.இதையடுத்து,அவருடன் வந்தவர்கள் கரடியை விரட்டி அடிக்க முயற்சி செய்தனர்.எனினும்,பிரபு சம்பவ இடத்திலேயே பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்க