• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கரடியுன் செல்ஃபி எடுக்க முயன்று உயிரிழந்த இளைஞர்!

May 4, 2018 தண்டோரா குழு

கரடியுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தவர் கரடி தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் பிரபு பத்தாரா என்ற வேன் ஓட்டுனர் திருமண நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினரை காட்டுப்பகுதி வழியாக வேனில் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தார்.அப்போது,வழியில் காயம் அடைந்த நிலையில்,கரடி ஒன்று படுத்திருந்தது.கரடியை பார்த்த பிரபு அதனுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு அருகே நின்று செல்ஃபி எடுத்தார்.

சற்றும் எதிர்பாராத விதமாக பிரபு கால் தவறி கரடி மீது விழுந்துள்ளார்.அப்போது,அந்த கரடி அவரை கடுமையாக தாக்கியது.எனினும்,அவர் கரடியிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தார்.ஆனால் அந்த கரடி அவரை பலமாக தாக்கி கிழே தள்ளியது.இதையடுத்து,அவருடன் வந்தவர்கள் கரடியை விரட்டி அடிக்க முயற்சி செய்தனர்.எனினும்,பிரபு சம்பவ இடத்திலேயே பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் படிக்க