• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமல் எந்த கிராமத்துக்காவது சென்று மக்களை சந்தித்து இருப்பாரா- முதலமைச்சர் கேள்வி

March 14, 2017 தண்டோரா குழு

நடிகர் கமல் இதுவரை எந்த கிராமத்துக்காவது சென்று மக்களை சந்தித்திருப்பாரா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசியதாவது

நடிகர் கமல்ஹாசன் என்னை பற்றியும் தற்போது உள்ள ஆட்சித் தொடரக்கூடாது என்றும் தொடர்ந்து பேசிவருகிறார்.ஆட்சி மீது குற்றம்சாட்டுபவர்கள் என்ன குறை கண்டார்கள்.கமல் இதுவரை எந்த கிராமத்துக்காவது சென்று மக்களை சந்தித்திருப்பாரா என கேள்விஎழுப்பினார்.

விஸ்வரூபம் படம் வெளியாக உதவி செய்தவர் ஜெயலலிதா என்றும் கமல்ஹாசன் அந்த நன்றியை மறந்து பேசுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், எனக்கு முதலமைச்சராகும் தகுதி இல்லை என்பதா? நான் அடிமட்ட தொண்டனாக இருந்து தான் தற்போது முதலமைச்சராக வந்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன், தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க