• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கப்போர்ட் ஃபுல் தன்னார்வ அமைப்பு சார்பில் அனைவருக்கும் ஆடை வழங்கும் நிகழ்ச்சி

January 3, 2021 தண்டோரா குழு

2021 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக கோவையில் சாலையோரங்களில் இருப்பிடம் இன்றி வசிக்கும் ஆதரவற்றவர்களை அரவணைக்கும் விதமாக அனைவருக்கும் ஆடை என்ற நிகழ்ச்சியை ‘கப்போர்ட் புள்’ என்னும் தன்னார்வ நிறுவனம் சார்பில் இலவசமாக ஆடை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் நிகில் மற்றும் கார்த்திக்ராஜா குழுவினர் கோவை ஆர்எஸ் புரம் காந்தி பார்க் டவுன்ஹால் உக்கடம் குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் உள்ள முதியோர் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு ஆடைகளை வழங்கி வருகின்றனர்.

இது குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில்,

கோவையில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆதரவற்றவர்களை அரவணைத்து வருகிறது. அதில் எங்களின் சிறிய பங்காக கடந்த மாதம் துயில் போர்வை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி தொடர்ந்து அனைவருக்கும் ஆடை என்ற பெயரில் பொது மக்களிடம் பழைய புதிய பயன்படுத்தப்பட்ட பயன்படுத்தப்படாத மற்றும் செறிவராத அனைத்து ஆடைகளையும் ஒருங்கிணைத்து அதனை பரிசோதனை செய்த பின்னர் அதனை சாலையோர மக்களுக்கு எங்கள் குழுவினர் நேரில் சென்று வழங்கி எங்களது சேவையை கோவை மாவட்டத்தில் செய்து வருகின்றனர். இதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்றனர்.

மேலும் படிக்க