• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கனடாவில் மசூதியில் துப்பாக்கிச்சூடு, 5 பேர் பலி

January 30, 2017 தண்டோரா குழு

கனடாவில் உள்ள கியூபெக் நகரில் ஒரு மசூதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில், 5 பேர் இறந்ததாக அஞ்சப்படுகிறது.

இது குறித்து மசூதியின் நிர்வாகி முகமத் யான்ஹு கூறும்போது,

“கியூபெக் நகரில் உள்ள ஒரு மசூதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மூன்று மர்ம நபர்கள் திடீரென்று கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர்.

இந்தச் சம்பவம் நடைபெற்ற போது மசூதியில் ஏறக்குறைய 40 பேர் இருந்தனர் என்றும், 5 பேர் உயிரிழந்தாகவும், பலர் காயமுற்றிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று கூறினார்.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவத்தையடுத்து போலீசார் அந்த இடத்தைப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

இஸ்லாமிய பெண்கள் பொது இடங்களில் முகத்திரை அணிந்து செல்ல கனடா அரசு தடை விதித்தது முதல் அங்கு வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க