• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கந்துவட்டி கொடுமை, அராஜகம், மீட்டர் வட்டி- சுவரொட்டிகளை ஏந்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு

May 31, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட குடிமக்கள் வாழ்வுரிமை சங்கத்தின் மூலம், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த குமார் என்பவர், கந்துவட்டி காரரான மனோகரன் என்பவர் வட்டி கேட்டு தொல்லை செய்வதாகவும் மிரட்டுவதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.

இது குறித்து பேசிய குமார்,

தனது தந்தை வெள்ளியங்கிரி சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த மனோகரன் எனவரிடமிருந்து கடனாக 50 ஆயிரம் வாங்கியதற்கு மிட்டர் வட்டி என கூறி பல லட்சம் ரூபாய் திருப்பி தர வேண்டும் என தொல்லை கொடுத்து வந்ததாகவும் இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் புகாரை வாபஸ் பெறச் சொல்லி சில ஆட்களை கொண்டு மிரட்டுவதாகவும் தற்போது தனது தந்தை கால் அறுவை சிகிச்சை செய்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மனோகரன் தன்னையும் தனது மாற்றுத்திறனாளி தம்பியையும் பணம் தர சொல்லி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மனு அளிக்க வந்த குமார் மற்றும் அவரது உறவினர்கள் “கந்துவட்டிக் கொடுமை… அராஜகம்… மீட்டர் வட்டி…, துப்புரவு தொழிலாளர்களின் ஏடிஎம் கார்டுகளை சிங்காநல்லூர் கந்துவட்டி மனோகரனிடமிருந்து பறிமுதல் செய்க, வெள்ளியங்கிரி கொடுத்த கந்துவட்டி புகார் மீது நடவடிக்கை எடுத்து மனோகரனை கைது செய்ய வேண்டும்” என வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஏந்தி மனு அளிக்க வந்தனர்.

மேலும் படிக்க