• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடைத்தெருக்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஆலோசனை

March 12, 2022 தண்டோரா குழு

கோவையில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எந்த சமரசமூம் இன்றி மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடைத்தெருக்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் வீதி, டவுன்ஹால், 100 அடி சாலை, காந்திபுரம் உள்ளிட்ட கடைத்தெரு பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அதனையும் மீறி மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அடுத்து மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

வணிகர்கள் தங்களது கடைகளில் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்ட அளவே மக்களை அனுமதிக்க வேண்டும். குறிப்பாக 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்களும், வணிகர்களும் தவறாது பின்பற்ற வேண்டும். மாநகராட்சி சார்பாக கொரோனா பரவலை தடுக்க அமைக்கப்பட்ட பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க