• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கடன் தொல்லையால்,பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண்!

July 31, 2017 தண்டோரா குழு

சீனாவில் கிரெடிட் கார்ட் மூலம் அளவுக்கு அதிகாமாக கடன் வாங்கி, அதை திருப்பிக் கட்ட முடியாததால், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் முகத்தை மாற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவை சேர்ந்த ஜூநாஜுஆன் (59), கிரெடிட் கார்டை பயன்படுத்தி 3.71 மில்லியன் டாலர் கடன் வாங்கியுள்ளார். சீனாவின் ஹுபெய் மாகணத்தின் தலைநகரான வுஹான் நகரிலுள்ள நீதிமன்றத்தில், கடனை திருப்பி தராத அவர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அவர் திருப்பி தரவேண்டிய 3. 71 மில்லியன் டாலர் தொகையை உடனே திருப்பி தரவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.

இந்நிலையில் கடனை திருப்பி தராததையடுத்து, அவரைப் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். சீனாவின் ஷேன்ஷேன் என்னும் நகரில் ஷூ நாஜுஆன் இருப்பது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. உடனே அங்கு சென்ற அவர்கள் ஷூ நாஜுஆனை கைது செய்துள்ளனர். ஆனால், அவர்களிடம் இருந்த அவருடைய புகைப்படத்தில் இருந்த முகமும், தற்போது உள்ள முகம் வெவ்வேறாக இருந்துள்ளது. இதை பார்த்த அவர்கள் முதலில் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஆனால், அவரிடம் நடத்திய விசாரணையில், கிரெடிட் கார்டை பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதாகவும், அதை திருப்பி தர முடியாததால், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலமாக தன்னுடைய முகத்தை மாற்றிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க