• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடந்த 4 நாட்களில் ரூ 602 கோடிக்கு மது விற்பனை – டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!

November 7, 2018 தண்டோரா குழு

கடந்த 4 நாட்களில் ரூ 602 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீபாவளி என்றாலே பட்டாசு விற்பனையுடன் சேர்த்து மது விற்பனையும் ஜோராக இருக்கும். ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை கூடிக்கொண்டேயிருக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி டாஸ்மாக் மது விற்பனை 320 கோடி ரூபாய் இலக்காக நிர்ணயிக்கப் பட்டிருந்தது. இதையடுத்து, நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளிப் பண்டிகையையொட்டி தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால், விற்பனையின் அளவு அதிகரித்திருப்பதாக டாஸ்மாக் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த 4 நாட்களில் ரூ 602 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. அதன்படி சனி – ரூ 124 கோடி, ஞாயிறு – ரூ 150 கோடி, திங்கள் ரூ 148 கோடி, தீபாவளி நாளான நேற்று ரூ 180 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டைப் பொறுத்தவரை அக்டோபர் 18-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட்டது. அன்றய தினமும் அதற்கு முந்தைய தினமும் மொத்தமாக 536 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 34% கூடுதலாக மது விற்பனை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க