• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடந்த சில நாட்களுக்கு மேலாக நம்பர் இல்லாமல் செல்லும் மேயர் கார்

September 5, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, பதிவு எண் இல்லாமல் அரசு வாகனத்தினை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி மேயராக இருப்பவர் கல்பனா. இவருக்கு சமீபத்தில் மாநாகராட்சியில் இருந்து புதிய இன்னோவா வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வாகனத்திற்கு பதிவு எண் வாங்காமல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பயன்படுத்த பட்டு வருகின்றது. இன்று கோவை மத்திய சிறையில் நடைபெற்ற வ.உ.சி 151 வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்கவும் பதிவு எண் இல்லாத காரையே மேயர் கல்பனா பயன்படுத்தினார்.

பதிவு எண் இல்லாமல் வாகனங்கள் இயக்குவது மோட்டார் வாகனசட்டப்படி தவறு என்கின்ற நிலையில் மக்கள் பிரதிநிதியே ஒரு வாரத்திற்கும் மேலாக பதிவு எண் இல்லாத வாகனத்தை பயன்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது , வாகனம் வாங்கியவுடன் போக்குவரத்து துறையில் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், நம்பர் பிளேட் போக்குவரத்து துறையில் இருந்து வந்தவுடன் உடனடியாக பொறுத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க