• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஞ்சா விற்பனை செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

November 19, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக தேனி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 21) கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கிருஷ்ணகுமார் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் எஸ்.பி செல்வநாகரத்தினம் கோவை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து ஆட்சியர் சமீரன், கஞ்சா வியாபாரி கிருஷ்ணகுமாரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை சிறையிலுள்ள கிருஷ்ணகுமாரிடம் போலீசார் வழங்கினர்.

மேலும் படிக்க