• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கஞ்சா விற்பனை : கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது

December 27, 2021 தண்டோரா குழு

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை திருச்சி ரோடு சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிங்காநல்லூர் போலீசார் நேற்று அப்பகுதிகளில் ரோந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் 2 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் தரணிதரன்(19), சூர்யாநகரை சேர்ந்த சாம்(20) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500கிராம் கஞ்சா, ரூ.2,300 மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க