November 19, 2018
தண்டோரா குழு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது கஜா புயல். இந்த கஜா புயல் நாகை – வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. கஜா புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இப்புயலின் தாக்கத்தால் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக்கின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளார்.