April 7, 2020
தண்டோரா குழு
கடந்த 25ந் தேதி முதல் கோவை கந்தே கவுண்டன் சாவடி மாகாளி அம்மன் நிர்வாக குழு மற்றும் அம்மன் டிரஸ்ட் க.க.சாவடி சார்பில் தினசரி வறுமையில் வாடும்150 முதியவர்களுக்கு வீடு தேடி சென்று சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட மதிய உணவு,முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு, அவர்கள் தினசரி பயன்படுத்தும் மருந்துகள் டிரஸ்ட் மூலம் வாங்கி தரப்படுகிறது.இந்த பணி ஊரடங்கு முடியும் வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கோவை நவக்கரை AVP நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் கபசுர கஷாயம் க.க.சாவடி பகுதியில் ஒவ்வொரு வீடாக வரும் வியாழன் அன்று அம்மன் டிரஸ்ட் மூலம் வழங்கப்பட உள்ளது.இந்த பணி ஊரடங்கு முடியும் வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையினை அம்மன் டிரஸ்ட் நிர்வாகிகள் எஸ்.மோகன் குமார் Vao Retd சி.அய்யாசாமி சிறைத்துறை ஓய்வு கே.சண்முகசுந்தரம் வே.விஸ்வநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.