• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாமக்கல், கிருஷ்ணகிரி எம்.பிக்கள் ஆதரவு

February 11, 2017 தண்டோரா குழு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க.வின் ஆர். சுந்தரம் (நாமக்கல்), மற்றும் அசோக்குமார் (கிருஷ்ணகிரி) மக்களவை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு சனிக்கிழமை நேரில் வந்து இருவரும் ஆதரவு தெரிவித்தனர். இதேபோல் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக உள்ளனர். இதன் மூலம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு எம்.பி.க்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.

முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி க்கள் என பலரும் தங்களது ஆதரவை அவருக்கு அளித்து வருகின்றனர்.
தமிழக அரசியலில் குழப்பமான சூழ்நிலை நீடிக்கிறது. எனினும் உறுதியாக நல்லதே நடக்கும் என்று தனது இல்லத்தில் உள்ள ஆதரவாளர்களிடம் முதலமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக மாநிலங்களவை அதிமுக எம்.பி மைத்ரேயன் தனது ஆதரவை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க