• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓ.என்.வி. இலக்கிய விருதை திருப்பித் தருவதாக கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!

May 29, 2021 தண்டோரா குழு

கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருது இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவிற்கு வழங்கப்படுவதாக ஓ. என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது. இதற்கிடையில், இதற்கு நடிகை பார்வதி, பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, விருதை மறுபரிசீலனை செய்வதாக ஓ. என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது.

இந்நிலையில், ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கப்பதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன். சர்ச்சைகளுக்கு இடையே இந்த விருதை பெறுவதை தவிர்க்க விரும்புகிறேன்.

எனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை ரூ.3 லட்சத்தை கேரள
முதல்வரின் நிவாரண நிதிக்கு அளியுங்கள். விருது மறுபரிசீலனைக்கு காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரது குறுக்கீடே காரணம்.
நான் மிக மிக உண்மையாக இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப்பார்க்கத் தேவையில்லை என கூறியுள்ளார்.

மேலும் படிக்க