• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓவியாவை கைது செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

March 4, 2019 தண்டோரா குழு

‘90ML’ படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நடித்ததாக நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் மகளிரணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அனிதா உதூப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் கடந்த 1-ம் தேதி வெளியான படம் 90 எம்.எல். இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இடம்பெற்றுள்ள இப்படத்திற்கு ’A’ சான்றிதழ் வழங்கபட்டது. இப்படத்தின் டிரைலர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதற்கிடையில் படத்தை பார்த்தும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகளை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் பெண்கள் அமைப்பு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவ்வமைப்பின் மகளிரணி மாநில அமைப்பாளர் ஆரிபா ரசாக்,

இப்படம் குழந்தைகளை சீரழிக்கும் படமாகவும் ”பெண்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மது அருந்துவது, புகைபிடிப்பது , படுக்கை அறை ரகசியங்களை அம்பலப்படுத்தும் வகையில் பேசுவது போன்ற கலாச்சார சீரழிவு நிறைந்து இப்படத்தின் திரைக்கதை அமைத்துள்ளனர். ஆகையால் கலாச்சார சீரழிவுக்கு காரணமான 90 எம்.எல் திரைப்படத்தை உடனே தடைசெய்ய செய்யவேண்டும். இந்தப் படத்தில் நடித்த நடிகைகள் மற்றும் இயக்குநர் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற திரைப்படங்களை எடுத்து திரையிட மாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க