• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் : தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத்

June 6, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடியில் தற்போது தற்காலிகமாக தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதாகவும் ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் என்றும் ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.அப்போது போலீசார் நடத்தியதுப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.மேலும்,65-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இதையடுத்து, 22 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில்,டெல்லியில் ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளும்,தொண்டு நிறுவனங்களும் தான் காரணம்.ஆலையை மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும்.தூத்துக்குடியில் அமைதி திரும்ப காத்திருக்கிறோம் எனkக் கூறினார்.

மேலும் படிக்க