• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்பாட்டம்

July 5, 2018 தண்டோரா குழு

கோவையில் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளைக் வலியுறுத்தி,கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளைக் வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குறைந்தபட்சம் பென்சனாக ரூ 7850 வழங்க வேண்டும்,மருத்துவப்படி ரூ 300 வழங்குவது மட்டுமல்லாமல் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், பொங்கல் போனஸ் மற்றும் இலவச பஸ்பாஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைக் வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஊழியர்கள் மடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும்,பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் தங்களைக் அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என்றும் தற்போது மாதம் வழங்குகின்ற இந்த 2000 ரூபாய் பென்சன்,வயதான காலத்தில் தங்களின் மருத்துவ செலவுகளுக்கு கூட போதாது என தெரிவித்தனர்.எங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் மாநில தழுவிய தொடர் போராட்டங்களைக் நாங்கள் முன்னெடுப்போம் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க