ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் சபாநாயகர் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாதுஉயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதிமுக அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள், முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். இதையடுத்து, முதலமைச்சருக்கு எதிராக வாக்களித்த வர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இதையடுத்து, இவ்வழக்கில் இன்று வழங்குவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால்,தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அமர்வு இன்று தீர்பளித்துள்ளது.
அதில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள்களாக நீடிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால்
முடிவெடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்திரவிடமுடியாது. இந்த விவகாரத்தில் சபாநாயகர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. சபாநாயகரின் நிர்வாக முடிவில் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்திரவிட்டனர்.
பி.எஸ். ஜி மருத்துவ மருத்துவமனைக்கு பிறவிலேயே காது கேட்காதவர்களுக்கு காது கேட்கும் திறன் இல்லை என்பதை கண்டறியும் பரிசோதனை கருவி வழங்கல்
பத்து ஆண்டு காலத்திற்கு தன்னாட்சி உரிமை பெற்ற ஸ்ரீ நாராயண குரு கல்லூரி
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி மாபெரும் விழிப்புணர்வு பேரணி
கோவையில் சூப்பர்ஸ்டார் பிரேஸ்லட் வகைகளை அறிமுகம் செய்தது பி.எம்.ஜெ. ஜூவல்ஸ்
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியீடு
சமூகத்தில் பெண்கள் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும் -உதவி கமிஷனர் அஜய் தங்கம் பேச்சு