• Download mobile app
09 May 2025, FridayEdition - 3376
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓணம் கொண்டாட்டம் கேரள ரயில்கள் ஹவுஸ் ஃபுல்

September 6, 2022 தண்டோரா குழு

ஓணம் பண்டிகையையொட்டி, கேரளா செல்லும் ரயில்கள் ‘ஹவுஸ்புல்’ ஆகியுள்ளன.வரும், 8ல், ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தினர், ரயில்களில் சொந்த மாநிலத்துக்கு செல்லத் துவங்கியுள்ளனர். காரைக்கால் – எர்ணாகுளம் டீ கார்டன் எக்ஸ்பிரஸ், சென்னை – ஆலப்புழா எக்ஸ்பிரஸ், சென்னை – திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட், ஹைதராபாத் – திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ், புதுடில்லி – திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தினசரி ரயில்கள், ஹிம்சாகர், அகல்யநகரி, கன்னியாகுமரி, ஸ்வர்ணயஜெயந்தி, பாட்னா உள்ளிட்ட வாராந்திர ரயில்களில், டிக்கெட் முன்பதிவு நிறைவு பெற்று, காத்திருப்போர் பட்டியல், 100 முதல், 250ஐ கடந்துள்ளது.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,

‘கொரோனா பரவல் காரணமாக, இரு ஆண்டுகளாக, கேரளாவில் கொண்டாட்டங்கள் இல்லாமல் இருந்தன. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால், ஓணம் பண்டிகை களைகட்டியுள்ளது. பணி நிமித்தமாக வெளியூரில் வசிப்பவர்கள், சொந்த ஊருக்கு வருகின்றனர். அதனால், ரயில்கள் ‘ஹவுஸ் புல்’ ஆகியிருக்கின்றன. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஒரு வாரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்’ என்றனர்.

மேலும் படிக்க