• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரே குழுவாக தேசிய கல்வி சுற்றுலா சென்று திரும்பிய 141 பள்ளி மாணவ,மாணவிகள்

November 9, 2022 தண்டோரா குழு

கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.எஸ்.எம்.மெட்ரிக் பள்ளியில் பயிலும் 141 மாணவ,மாணவிகள் ஒரே குழுவாக உ.பி. ராஜஸ்தான்,டில்லி என தேசிய கல்வி சுற்றுலா சென்று திரும்பியுள்ளது தமிழக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மாணவ,மாணவிகள் பள்ளிகளில் கல்வி பயிலும் போதே அவர்களின் தனி திறன்களை மேம்படுத்தும் விதமாக பல்வேறு திறனாய்வு போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் கோவை கவுண்டர் மில் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியான வி.சி.எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் இந்திய வரலாற்று சின்னங்களை நேரில் கண்டு பயிலும் விதமாக பள்ளி நிர்வாகம் சார்பாக மெகா தேசிய சுற்றுலா பயணம் அழைத்து சென்று அசத்தியுள்ளனர்.

அதன் படி பத்து, பதினொன்று, பனிரெண்டாம் பயிலும் 79 மாணவர்கள் 62 மாணவிகள் என 141 மாணவ,மாணவிகளையும் ஒரே குழுவாக இணைத்து தேசிய சுற்றுலா சென்று வந்துள்ளனர்.எட்டு நாட்கள் பயணமாக சென்று திரும்பிய மாணவ,,மாணவிகள் தங்களது பயணம் குறித்த அனுபவங்களை கூறுகையில்,வரலாற்று புத்தகங்களில் வரும் பொற்கோவில், தாஜ்மகால்,குதூப் மினார் போன்ற பல்வேறு இடங்களை நேரில் பார்த்ததை பிரமிப்பாக இருந்ததாக கூறினார்.

மாணவ,மாணவிகளை அழைத்து சென்ற பள்ளி நிர்வாக குழுவினர் கூறுகையில்,

தனியார் பள்ளி சுற்றுலாவாக குறைந்த செலவில் எட்டு நாட்கள் சுற்றுலா பயணமாக பாதுகாப்பாக அழைத்து சென்று திரும்பியதில் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தனர். ஒரே குழுவாக 141 மாணவ,மாணவிகள் தேசிய சுற்றுலாவாக திரும்பியுள்ள இந்த பயணம் தமிழக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க