• Download mobile app
14 Feb 2026, SaturdayEdition - 3657
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரே அறையில் 2 கழிப்பிடங்கள்-சர்ச்சைக்கு நடுவே செய்யப்பட்ட மாற்றம்

September 9, 2022 தண்டோரா குழு

அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கட்டப்பட்டுள்ள சமுதாய கழிவறை வளாகத்தில் , ஓரே அறையினை இருவர் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கபட்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கிடையில், இக்கழிப்பிடத்தில் உள்ள பழுதுகளை நீக்கி,பராமரிப்பு செய்ய ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. சிறுவர்கள் உபயோகப்படுத்த அமைக்கப்பட்ட கழிப்பிடம் உபயோகம் இல்லாமல் இருப்பதால் அவைகளை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்றப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,ஒரே அறையில் இரண்டு கழிவறைகள் இருந்த நிலையில்,அதை சிறுநீர் கழிக்கும் இடமாக மாற்றி கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் படிக்க