• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரே அகாடமியை சேர்ந்த ஆறு கிராமப்புற கலைஞர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்

December 13, 2020 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த ஒரே அகாடமியை சேர்ந்த ஆறு கிராமப்புற கலைஞர்கள் சர்வதேச தமிழ் பல்கலைகழத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ளனர்.

கோவையில் கடந்த ஒரு மாதங்களாக நாட்டுப்புற கலைகளில் தொடர் சாதனையாக ஒரே அகாடமியை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள் பல்வேறு சாதனைகள் செய்து அசத்தினர்.ஆணி படுக்கையில் நின்று பறையிசைப்பது, கண்ணாடி துண்டுகள் மீது நின்று கரகாட்டம்,கைகளில் நெருப்பை ஏந்தியபடி ஒற்றைக்காலில் கரகம் என கிராம்ப்புற கலைகளில் தொடர்ந்து சாதனை செய்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களது இந்த தொடர் சாதனையை பாராட்டி மதுரையில் சர்வதேச தமிழ் பல்கலைகழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டத்தை தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கி கவுரவித்துள்ளார். இந்நிலையில் கோவை கிராமிய புதல்வன் அகாடமியின் நிறுவனர் டாக்டர் கலையரசன் உட்பட பட்டம் பெற்ற அனைவருக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் படிக்க