• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரே அகாடமியை சேர்ந்த ஆறு கிராமப்புற கலைஞர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்

December 13, 2020 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த ஒரே அகாடமியை சேர்ந்த ஆறு கிராமப்புற கலைஞர்கள் சர்வதேச தமிழ் பல்கலைகழத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்று அசத்தியுள்ளனர்.

கோவையில் கடந்த ஒரு மாதங்களாக நாட்டுப்புற கலைகளில் தொடர் சாதனையாக ஒரே அகாடமியை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள் பல்வேறு சாதனைகள் செய்து அசத்தினர்.ஆணி படுக்கையில் நின்று பறையிசைப்பது, கண்ணாடி துண்டுகள் மீது நின்று கரகாட்டம்,கைகளில் நெருப்பை ஏந்தியபடி ஒற்றைக்காலில் கரகம் என கிராம்ப்புற கலைகளில் தொடர்ந்து சாதனை செய்துள்ளனர்.

இந்நிலையில் இவர்களது இந்த தொடர் சாதனையை பாராட்டி மதுரையில் சர்வதேச தமிழ் பல்கலைகழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டத்தை தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் வழங்கி கவுரவித்துள்ளார். இந்நிலையில் கோவை கிராமிய புதல்வன் அகாடமியின் நிறுவனர் டாக்டர் கலையரசன் உட்பட பட்டம் பெற்ற அனைவருக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

மேலும் படிக்க