• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு ரூபாய் இட்லி பாட்டியை கட்டிப்பிடித்து பாராட்டிய தமிழிசை சவுந்தர்ராஜன் !

March 14, 2022 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளை கட்டிப்பிடித்து கொஞ்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

கோவை ஆலாந்துறையை அடுத்த வடிவேலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கமலாத்தாள். 85 வயதான இவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். இவரது லாப நோக்கமற்ற மனதை பொதுமக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் பாராட்டியுள்ளனர்.

ஒரு ரூபாய் பாட்டி என்றே அழைக்கப்பட்டு வரும் கமலாத்தாள் பாட்டி பல விருதுகளை பெற்று வருகிறார்.இந்நிலையில், கோவை திருமலயாம்பாளையம் பகுதியில் உள்ள நேரு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கமலாத்தாள் விருது வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.

சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கினார்.அப்போது கமலாத்தாள் பாட்டியை பார்த்ததும் கட்டித்தழுவி கொஞ்சினார். மேலும், அவரை நலம் விசாரித்ததுடன் விருது வழங்கி கவுரவப்படுத்தினார்.

ஒரு ரூபாய் இட்லி பாட்டியை அறிந்து வைத்ததுடன், ஆளுநர் அவரை பார்த்ததும் கட்டிப்பிடித்து கொஞ்சியது காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்தது. இந்த நிகழ்ச்சியில் நேரு கல்வி குடும்பத்தின் முதன்மை செயலாளர் மற்றும் கல்வி அதிகாரி கிருஷ்ணகுமார், தலைவர் கிருஷ்ண தாஸ் மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க