• Download mobile app
31 May 2025, SaturdayEdition - 3398
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒப்பந்ததாரர் புகார்; 35 கோடி ரூபாய்கான டெண்டரை ரத்து செய்த நெடுஞ்சாலை துறை

January 6, 2020

ஒப்பந்ததாரரின் புகாரை தொடர்ந்து 35 கோடி ரூபாய்கான டெண்டரை நெடுஞ்சாலை துறை அலுவலகம் ரத்து செய்தது.

கூடலூர் சேரம்பாடி பகுதியை சேர்ந்த ஒப்பந்தகாரர் ராயின். இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுஞ்சாலை துறை ஒப்பந்த பணி உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார். சமீபத்தில் கூடலூர் பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளி மற்றும் தடுப்பு சுவர்கள் இடிந்து பலத்த சேதமடைந்தது. கூடலூரில் இருந்து சேரம்பாடிவரை 30 இடங்களில் சாலைகள் மற்றும் தடுப்பு சுவர்களை சரி செய்ய 35 கோடிக்கு மூடிய டெண்டர் விடப்பட்டது.

இந்நிலையில் தனது அலைபேசியை ஹாக் செய்யபட்டு டெண்டர் தொடர்பான அனைத்து தகவல் பறிமாற்றங்களும் வெளியிட பட்டுள்ளதாக கூறினார். மேலும் கூடலூர் பகுதியை சேர்ந்த சிபி, தேவாலா பகுதியை சேர்ந்த அனிஷ் ஆகியோர் டெண்டரை பெற தங்களுக்கு 50 லட்சம் ரூபாய் தர வேண்டுமென மிரட்டுவதாக குற்றம் சாடினார். இதனை தொடர்ந்து கோவை திருச்சி சாலையில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம், நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார். இந்த புகார் மனுவை பெற்று கொண்ட கண்காணிப்பாளர் சுரேஷ் 35 கோடி ரூபாய்கான டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க