August 17, 2025
தண்டோரா குழு
கோவை ஒப்பணக்கார வீதி தி சென்னை சில்க்ஸில் ஆவணி மாத சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு,திருமண பட்டு பெருவிழாவின் துவக்க விழா கோலகலமாக துவங்கியது.
இவ்விழாவில் மகேஸ்வரி, பிரியா விஜய சேகரன்,காயத்ரி,சரண்யா உள்ளிட்ட வாடிக்கையாளர்களும்,பொது மேலாளர் நந்தகுமார்,மேலாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.முகூர்த்த தினங்களை முன்னிட்டு புத்தம்புது பட்டு சேலை ரகங்கள்,திருமண வரவேற்பு பேன்சி சேலை ரகங்கள்,மணமகனுக்கான பட்டு வேஷ்டி,ஷெர்வாணி உள்ளிட்ட ரகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக மேலாளர் தெரிவித்தார்.