• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒன்றிய அரசு அறிவியல் தொழில்நுட்பத்துறை நிதியில் நடைபெறும் குடிநீர் பணிகள் – மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

March 17, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 17க்குட்பட்ட கவுண்டம்பாளையம், சேரன் நகர்,அபிராமி நகர் பகுதியில் சுமார் 400 குடியிருப்புகள் உள்ளன.

இப்பகுதிகளில் 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் வழங்குதல்,குடிநீர் சீரான அளவு வழங்குதல்,பழுதுகளை கண்டறிதல், இணை வழியில் கண்காணித்தல் போன்ற பணிகள் ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.தனியார் தொழில்நுட்ப கல்லூரி சார்பில் ஒன்றிய அரசு அறிவியல் தொழில்நுட்பத்துறை நிதியில் இப்பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன.

விரையில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.அதன்பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். தற்போது நடைபெற்று வரும் பணிகளான கட்டுப்பாட்டு அறை,குடிநீர் தரம், விநியோகம் செய்யும் முறைகள்,திட்டம் செயல்படுத்தும் முறைகள், தொழில்நுட்பம் ஆகியவை குறித்து மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

முன்னதாக செல்வம்பதி, கிருஷ்ணம்பதி குளங்களில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது 17வது வார்டு கவுன்சிலர் சுபஸ்ரீ சரத், மேற்கு மண்டல உதவி கமிஷனர் சரவணன், குடிநீர் நிர்வாக பொறியாளர் உமாதேவி மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க