• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐ லவ் கோவை செல்பி கார்னரில் புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல்வர்

January 25, 2021 தண்டோரா குழு

உக்கடம் பெரியகுளம் மேம்படுத்தப்பட்டுள்ளதை பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘ஐ லவ் கோவை’ செல்பி கார்னரில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களாக கோவையின் வெவ்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட உக்கடம் பெரியகுளத்தின் அழகை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், முதலமைச்சரை வரவேற்கும் விதமாக வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மேலும், லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டு, நவீன நுட்பத்துடன் இயங்கும் எல்.இ.டி வண்ண விளக்குகள் கொண்டு ஒளி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. தொடர்ந்து கோவையின் அடையாளமாக திகழும் ‘ஐ லவ் கோவை’ செல்பி கார்னரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நன்றியுரை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

5 ஆண்டுகளில் 50 ஆண்டுகால வளர்ச்சியை கொடுத்த வீரத்தமிழன் கோவை மக்களை சந்தித்தார். கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர். கோவை மாவட்ட மக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கிறோம்.கோவை மக்களுக்கு நிறைய திட்டம் கொடுத்துள்ளார் முதலமைச்சர். இரண்டு நாட்கள் மக்களின் மகிழ்ச்சியை பார்த்துள்ளார். உலக தரத்திற்கு இணையாக இந்த திட்டத்தை கொடுத்துள்ளார் விவசாய முதலமைச்சர். ஆட்சி தாக்குபிடிக்குமா என்றும், கலைத்துவிடலாம் என்றும் கனவு கண்டார் ஸ்டாலின். ஆனால், விவசாயி ஒருவரால் நல்லாட்சி கொடுக்க முடியும் என்று நிரூபித்தவர் முதலமைச்சர். மாணவர்கள் ,இளைஞர்களின் சூப்பார் ஸ்டாராக உள்ளார். 2021ல் மீண்டும் முதலமைச்சராக வருவார். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இந்நிகழ்வில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ஜூனன், சண்முகம், கந்தசாமி, ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க